மறக்க முடியாத மாமனிதர்கள்.
என் வாழ்வில் நான் நிறைய மனிதர்களை பார்த்திருக்கிறேன். அவர்களிடமிருந்து அதிகம் கற்றுகொண்டேன். என்னை சிந்திக்க தூண்டியவர்கள், என் சிந்தனையை மாற்றிப்போட்டவர்கள் என்று பலரும் என் அனுபவங்களில் ஐக்கியமாகிப்போனார்கள்.என் மனம் மழலையாக இருந்த பொழுது (பள்ளிப்பருவத்தில்) முரட்டுத்தனமாக என்மீது முள் எறிந்தவர்கள் மத்தியில், ஆசிரியர்கள்தான் என்னை அறிவின் மொழி பேசி ஆற்றுப்படுத்தினார்கள். குறுநடை பயின்ற என்னை குட்டுவைத்து ஏறுநடை பயிற்று ஏற்றிவிட்டார்கள். வயிற்று பசியால் நானிருந்த போதெல்லாம் சம்மட்டியால் ஓங்கியடித்து அறிவெனும் அருசுவையூட்டி அமுதுபடைத்தார்கள். வாழ்கையை கற்றுத்தந்து வாழ்த்தி வந்தார்கள்.
அவர்களது நடை, உடை, அறிவு கனிந்த பேச்சு, அன்பு கலந்த பாசம், எதிர்பார்ப்பு ஏதுமில்லாமல் எடுத்துக்கொண்ட அக்கறை.
நிகழ்காலத்தில் நானாக கடந்தகால அவர்கள்.